IPL கிரிகெட்டும், அரசாங்கமும்

Saturday, April 24, 2010


தலைமையகத்தில் நடந்த ஜும்மாவின்
இரண்டாவது அமர்வில் ஆற்றிய உரையின் சுருக்கம்.



கி​ரிக்​கெட் பற்​றிக் கூறும்​போது,​​ 11 முட்​டாள்​கள் விளை​யா​டு​வதை 11 ஆயி​ரம் முட்​டாள்​கள் பார்க்​கி​றார்​கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இன்று​ 11 அதி​புத்​தி​சா​லி​கள் விளை​யா​டு​வதை 110 கோடி முட்​டாள்​கள் பார்க்​கி​றார்​கள். கி​ரிக்​கெட் மீது ஆரோக்​கி​ய​மான விமர்​ச​னங்​கள் மட்​டுமே எழுந்த கால​கட்​டம் மலை​யே​றி​விட்​டது.​ ​ நூ​றாண்​டு​க​ளுக்​கும் மேலாக கிரிக்​கெட் விளை​யா​டப்​ப​டு​கி​றது.​ ஆனால் அநா​க​ரி​க​மான சர்ச்​சை​க​ளும்,​​ விவ​கா​ரங்​க​ளும்,​​ ஊழல் குற்​றச்​சாட்​டு​க​ளும் அப்​போ​தெல்​லாம் எழுந்​த​தா​கத் தெரி​ய​வில்லை.​ என்​றைக்கு கிரிக்​கெட் விளை​யாட்​டா​கப் பார்க்​கப்​ப​டா​மல் கொள்ளை லாபம் ஈட்​டும் வணி​க​மா​கப் பார்க்​கப்​பட்​டதோ அப்​போதே அது விளையாட்டு என்ற பெயரை இழந்​து​விட்​டது.​ அது மட்​டு​மல்ல,​​ பல்​வேறு தட​கள விளை​யாட்​டு​கள் மீதான சமூ​கத்​தின் கவ​னத்​தை​யும் கிரிக்​கெட் கப​ளீ​க​ரம் செய்​து​விட்​டது.​ கி​ரிக்​கெட்​டின் அசுர வளர்ச்​சிக்கு பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளின் வணிக நோக்​கமே கார​ணம் என்​றால் அது மிகை​யல்ல.​ ​இரு நாடு​க​ளுக்கு இடை​யி​லான விளை​யாட்டை விளை​யாட்​டா​கப் பார்க்க வேண்​டு​மே​யன்றி அதை ஒரு போர் போலப் பார்க்​கக் கூடாது என்ற அடிப்​ப​டைப் பண்​பைக் கூட கிரிக்​கெட் வளர்க்​க​வில்லை.​ மாறாக பகை உணர்ச்​சியை மேலும் மேலும் தூண்டி,​​ அதன் மூலம் காசு பார்க்​கும் குறைந்​த​பட்ச நேர்​மை​யில்​லாத வணிக நோக்​கமே மேலோங்​கி​யி​ருக்​கி​றது.​ கி​ரிக்​கெட் என்ற நல்ல விளை​யாட்டு குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல ஆன​தற்கு யார் கார​ணம் என்று உற்று நோக்​கி​னால்,​​ பன்​னாட்டு வணிக நிறு​வ​னங்​க​ளும்,​​ ஸ்பான்​சர் என்ற பெய​ரில் வீரர்​க​ளுக்​குத் தரும் பண​மும்,​​ ஊட​கங்​கள் கிரிக்​கெட்​டுக்கு மட்​டுமே தரும் அதிக முக்​கி​யத்​தும் மட்டுமே என்​பது புரி​யும்.​ இந்​தியா-​பாகிஸ்​தான் இடை​யி​லான கிரிக்​கெட் போட்​டியை ஏதோ இரு நாடு​க​ளி​டை​யி​லான போரா​கவே பார்க்க வைக்​கப்​பட்​ட​தன் கார​ணம் என்ன? போட்​டி​யின் போது ஒரு பேச்​சுக்கு எதி​ரணி வீர​ருக்கு சாத​க​மா​கப் பேசி​னால் கூட சுற்​றி​யி​ருப்​ப​வர்​கள் நம்மை தேச விரோ​தி​யா​கப் பார்ப்​ப​தற்கு யார் கார​ணம்? போலி தேச​பக்​தியை ஊட்டி வளர்த்​த​தன் பின்​னணி வணி​கம்​.
கி​ரிக்​கெட்​டில் வெற்றி தோல்​வியை நிர்​ண​யிக்​கும் பெட்​டிங் என்ற சூதாட்​டம் நடை​பெ​று​கி​றது நன்​றாக விளை​யா​டும் வீரர் திடீர் அவுட் ஆவ​தும்,​​ சுமா​ராக விளை​யா​டும் வீரர் நன்​றாக விளை​யா​டு​வ​தும்,​​ நல்ல அணி​யின் திடீர் தோல்​வி​யும்,​​ மோச​மான அணி​யின் எதிர்​பாரா இமா​லய வெற்றி அடை​வ​து​மாக கிரிக்​கெட்​டில் இதெல்​லாம் சாதா​ர​ண​மாகி விட்டது.இதெல்​லாம் பெட்​டிங்​கால்​தான் நடைபெறுகிறது. கிரிக்​கெட்​டில் வெற்​றி​யும் தோல்​வி​யும் மட்​டு​மல்ல,​​ பெட்​டிங்​கும் சாதா​ர​ணம் என்று எண்ணி வழக்​கம் போல வணிக நிறு​வன வலை​யில் வீழ்ந்து கிரிக்​கெட்டை மக்கள் தொடர்ந்த் ரசிக்கிறார்கள்.​ ஐபி​எல் போட்டி ஓர் அடி​மைத்​த​னம் குடி​யும்,​​ கும்​மா​ள​மும்,​​ கலா​சார சீர்​கேட்​டுக்கு வழி​வ​குக்​கும் ஆட்​ட​மும் வீடு தேடி நம் வர​வேற்​ப​றை​யில் ஆடும்​போது தடுக்க வழி​யின்​றித் தவித்​துத்​தான் போகி​றோம்.​ நடிகைகள் ஒரு ஐபி​எல் கிரிக்​கெட் அணியை சில நூறு கோடி​க​ளுக்கு ஏலம் எடுத்​தார் என்று செய்​தி​கள் வரு​கின்​றன.​ வாழ்​நாள் முழு​வ​தும் சம்​பா​தித்த நடி​கை​யால் கூட இவ்​வ​ளவு தொகை​யைச் சேமிக்க முடி​யாது எனும்​போது இளம் நடி​கைகளுக்கு எங்​கி​ருந்து இத்​தனை கோடி​கள் வந்​தன என்று வரு​மான வரித்​துறை விசா​ரிக்​கா​தது ஆச்​ச​ரி​ய​மா​கத்​தான் உள்​ளது.​ சில திரைப்​ப​டங்​க​ளில் கதை என்று எது​வும் இருக்​காது.​ ஆனால் வெறும் திரைக்​க​தை​யின் விறு​வி​றுப்​புக்​காக அந்​தப் படம் வெற்றி பெறும்.​ பிறகு அதே போல பல படங்​கள் வரும்​போது வெறுப்பை ஏற்​ப​டுத்​தும்.​ பல்​வேறு கிரிக்​கெட் அர​சி​ய​லைப் பார்த்​தா​கி​விட்​டது.​கிரிக்​கெட் விளை​யாட்​டின் அடுத்த அர​சி​யல் பரி​ணா​மத்​தைப் பார்த்​துக் கொண்​டி​ருக்​கி​றார்​கள் இந்​தி​யர்​கள்.​ ஐ​பி​எல் போட்​டி​கள் விவ​கா​ரம் பெட்​டிங்கி​லி​ருந்து ஊழல் பக்​கம் சென்று இப்​போது குண்டு வெடிப்​பில் வந்து நிற்​கி​றது.​ ​ஒரு அணிக்கு ரூ.1,500 கோடி,​​ ரூ.3,000 கோடி ஏலம் என்று கூறு​வ​தைப் பார்த்​தால் கருப்​புப் பணத்​தில்​தான் ஐபி​எல் போட்​டி​களே விளை​யா​டப்​ப​டு​கி​றதோ என்று சந்​தே​கம் எழ ஆரம்​பித்​துள்​ளது.​ ஆனால் எது​வும் சில​கா​லம் என்​பது போல இது​வும் கடந்து போகும்.​ அப்​போது மீண்​டும் ஒரு ஐபி​எல் போட்​டியை பர​ப​ரப்​பு​டன் பார்ப்​ப​தற்கு இந்​தி​யர்​கள் தயா​ரா​கவே இருப்​பார்​கள்.​அ​து​வரை பாமர கிரிக்​கெட் ரசி​கன் முதல் படித்த விமர்​ச​கர்​கள் வரை சாமா​னி​யர்​க​ளுக்கு கிரிக்​கெட் விளை​யாட்டு ஒரு விளை​யாட்டு மட்​டுமே.​ ஆனால் பண முத​லை​க​ளுக்​கும்,​​ பன்​னாட்டு வணிக நிறு​வ​னங்​க​ளுக்​கும்,​​ ஊழல் அர​சி​யல்​வா​தி​க​ளுக்​கும் ​அவர்​தம் பினா​மி​க​ளுக்​கும்,​​ சூதா​டி​க​ளுக்​கும்,​​ நிழல் உலக தாதாக்​க​ளுக்​கும்,​​ கிரிக்​கெட் விளை​யாட்டு வெறும் விளை​யாட்​டல்ல!



சானியா திருமணத்தில் மீடியாக்களின் துவேஷம்

Friday, April 16, 2010

சானியாவின் திருமணத்தில் இந்திய மீடியாக்களின் மனநிலையை கண்டித்து விளக்கும் வீடியோ. ஜும்மா பேருரையின் இரண்டாவது அமர்வில் நிகழ்த்தப் பட்ட உரையின் பதிவுகள்.

நீங்கள் உங்கள் குழந்தைகளுடன்

Saturday, April 10, 2010

இப்பொழுதெல்லாம் நகரங்களில் பெரும்பாலும் குடியிருப்புகள் அபார்ட்மென்ட்ஸ் எனப்படும் அடுக்கு மாடிகளிலேதான் அமைகின்றன. அதில் வாழும் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிப்பது இல்லை. இதற்கு பாதுகாப்பு மற்றும் சில சூழ்நிலைகள் காரணங்களாகின்றன. அந்த குடும்பங்களில் ஒரே ஒரு குழந்தை இருக்கலாம். மேலும் அக்கம் பக்கத்து வீடுகளில் சரியான பழக்கம் இல்லாத காரணத்தினால் மற்றவர்களின் குழந்தைகளோடு விளையாடவும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.இத்தகைய சூழ்நிலைகளில் வளரும் குழந்தைகள் சரியான காற்றோற்றம் மற்றும் சூரிய வெளிச்சம் தங்களின் உடலில் படாமல் சிலவித உடல் கோளாறுகளினால் பாதிக்கப் படுகிறார்கள். போதிய சூரிய வெளிச்சம் அவர்களின் உடலில் படாததால் வைட்டமின் - டி குறைவு ஏற்படுகிறது. இதனால் அபார்ட்மென்ட்ஸ் சிண்ட்ரோம் எனப்படும் ஒரு வகையான நோயால் பாதிக்கப் படுகிறார்கள். இந்நோய் முடி வளர்ச்சி, தோல் குறைபாடு மற்றும் சில பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.குழந்தைகள் மட்டுமல்ல, பெரியோர்கள் கூட நகரங்களில் அதிகாலையிலேயே அலுவலம் சென்று, உணவு, குடிநீர் மற்றும் அனைத்து தேவைகளையும் தங்கள் அலுவலகங்களிலேயே முடித்து கொண்டு இரவு வீடு திரும்புகிறார்கள். இதில் எங்கே அவர்களுக்கு போதிய வைட்டமின் - டி, சூரிய ஒளியினால் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது? நமது உடலுக்கு தேவையான வைட்டமின் - டி, இலவசமாகவும், பெருமளவும் கிடைக்கக் கூடிய ஒரே ஆதாரம் சூரிய ஒளி மட்டுமே.எனவே பெற்றோர்களே! தினமும் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் வெளியே சென்று சூரிய ஒளியினால் கிடைக்கும் மகத்தான வைட்டமின் - டி யை பெற தவறாதீர்கள். எவ்வளவுக்கெவளவு நாம் இயற்கையை விட்டு விலகுகிறோமோ அவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கூடிய மட்டும் இயற்கையோடு ஒத்து வாழ்ந்து நலமுடன் வாழ முயற்சிப்போம்.

கோடைகாலம் செய்யவேண்டியவை

Friday, April 9, 2010

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பகல் நேரங்களில் வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு வெயில் காய்வதால், மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. தமிழகத்தில் பருவமழை போதுமான அளவு பெய்யாததால், வெயிலின் தாக்கம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வெயில் சுட்டெரிக்கத் துவங்கியது. கடல்காற்று வீசியதால் சென்னை மட்டுமின்றி கடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. ஆனால், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெயில் கடுமையாக இருந்து வருகிறது.அக்னி வெயில் துவங்குவதற்கு முன்னரே கடந்த சில நாட்களாக சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களிலும் வெயில் கொளுத்துகிறது. மதுரை, கோவை, திருச்சி, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியும் வெயில் அடித்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் நேற்று பகல் முழுவதும் அனல்காற்றுடன் வெயில் கொளுத்தியது. இதனால், பகலில் பொதுமக்கள் வெளியே தலைகாட்ட அச்சப்பட்டனர். இதனால், சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. பகல் முழுவதும் கொளுத்திய வெயிலின் தாக்கம், இரவிலும் நீடித்தது. இதனால், இரவு நேர புழுக்கம் காரணமாக தூக்கமின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

கோடைகாலம் (ஜும்மா பேருரையின் சுருக்கம்)

நம் மண்ணில் எத்தனையோ தரமான தயாரிப்புகள் உள்ளன நம் மண்ணின் ஆதார சுருதியான விவசாயத்தை சார்ந்த மோர் இளநீர் நுங்கு போன்றவைகள்

அடுத்த இரண்டு மாதங்களுக்கு உலுக்கி எடுத்துவிடும். 'ஜிவ்' என்று கிளம்பியுள்ள கோடை வெயிலை எப்படி சமாளிக்கப் போகின்றனர் என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆனால், ஒரு சில விஷயங்களை கையாண்டால் கோடையை சுலபமாக சமாளித்து விடலாம்.கோடை வெயிலில் இருந்து தப்பிக்க இதோ சில டிப்ஸ்...* தாய் பாலுக்கு இணையான புரதச் சத்துக்களை கொண்ட இளநீர், சூட்டை தணிக்கும். உடலை சீராக வைத்துக் கொள் ளும். ஜீரண சக்தியை அதிகரிக்கும், சிறுநீரகத்தை சுத்திகரிக் கும். உடலில் ஏற்படும் நீர் - உப்பு பற்றாக்குறையை இளநீர் சரிசெய் கிறது. இளநீரின் உப்புத் தன்மை, வழுவழுப்பு, காலரா நோய் களுக்கு நல்ல சத்து. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருட்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரில் தயாரிக் கப்படும் 'ஜெல்' என்ற பொருள் கண் நோய்களுக்கு சிறந்து மருந்து. இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது.* வெயில் நேரத்தில் 'பிரிட்ஜில்' வைத்த 'கேஸ்' குளிர் பானங்களை அருந்துவதை தவிர்ப் பது நல்லது. அதற்கு பதிலாக பழ வகைகளை அதிகம் சாப்பிடலாம். கோடையை முன்னிட்டு மூலைமுடுக்கெல்லாம் பழக்கடைகள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. தற்போதுள்ள விலைவாசியில் 15 ரூபாய்க்கு குறைந்து எந்த பழரசமும் கிடைப்பதில்லை. தர்பூசணி, வெள்ளரி, கிர்ணிப்பழம் ஆகியவற்றை மொத்தமாக வாங்கி, பழரசம் தயாரித்து பருகலாம்.* உடலில் உண்டாகும் வியர்வையை உறிஞ்சிடவும், வியர்க்குரு வருவதை தவிர்க்கவும் உன்னத வழி கதராடைகள் அணிவதுதான். 100 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரையிலும் கதர் ரெடிமேட் சட்டைகள் விற்கப்படுகின்றன.* ஓட்டையாகிப்போன ஓசோன் படலத்தின் வழியாக அதிகமான 'அல்ட்ரா வைலட்' கதிர்கள் பாய்ந்து கண்நோய் உண்டாக்குவதும் இந்த மூன்று மாதங் களில்தான். எனவே,'ஆட்டோ நிப்லக் ஸன் கிளாஸ்' அணிவதால் கண் நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.* இளநீர் குடிப்பதால் உடல் சூடு, காமாலை நோய், தோல் நோய் ஆகியவை வராமல் தடுக்கலாம். மேலும், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலையும் தவிர்க்கலாம்.* உடல் சூட்டை தவிர்க்கும் உன்னத பழம் என்று தர்பூசணியை கூறலாம். நுங்கு மற்றும் வெள்ளரி கோடை காலத்தில் மிகவும் உகந்தது.* குளிக்கும்போது, எலுமிச்சம் பழத்தை அரிந்து, அதனுடன் சிறிது உப்பை தடவி கழுத்து, அக்குள் ஆகிய பகுதிகளில் தேய்த்து வந்தால் வியர்வை நாற்றம் ஓடிவிடும்.* வெள்ளரி, கிர்ணிப்பழம் தொடர்ந்து சாப்பிட்டால் கோடையில் ஏற்படும் 'அக்கி அம்மை' நோய் அண்டாது.* வாழைப்பழம் உண்டால் சீதபேதி, மலச்சிக்கல் இருக்காது.ரோஜாப்பூ, குல்கந்து (தேனில் ஊற வைத்த ரோஜா இதழ்) சாப்பிட்டால் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.* குடிநீரில் 'வெட்டிவேர்' போட்டு வைத்தால் குடிநீர் மணமாக இருப்பதோடு, உடல் சூட்டையும் தணிக்கும்.

இன்றைய இளைய தலைமுறை மோர் குடிப்பதை கௌரவ குறைச்சல் என்று நினைக்க காரணம் அயல் நாட்டு நிறுவனங்கள் செய்த மூளை மழுங்கடிக்கும் விளையாட்டு சினிமா கலைஞர்களின் ஆடம்பர விளம்பரம் தவிர வேறு எதுவும் இல்லை .இவர்களுக்கு தேவை கோடிக்கணக்கான பணம் மட்டுமே இதனால் ஏற்படும் பாதகம் பற்றி இவர்களுக்கு என்ன கவலை நாம் ஒவ்வொரு முறை மோர் குடிக்கும் போதும் ஒரு விவசாயி நன்றியுடன் நம்மை பார்ப்பான் .இளநீர் விற்கும் சாலையோர வியாபாரி இடம் நாம் கொடுக்கும் பணம் அவன் வீட்டில் அடுப்பெரிய உதவியாக இருக்கும் நான் அந்நிய பொருள்களை முழுவதும் ஆகா புறக்கணியுங்கள் என்று சொல்ல வில்லை ஆனால் அந்த பொருள்களை நாம் பயன் படுத்துவதால் நம் இந்திய மண்ணிற்கு வருங்கால இயற்கைக்கு நாம் எவ்வளவு பெரும் தீமை செய்கிறோம் என்று மட்டும் நினைத்து பாருங்கள்
" வரும் கோடை காலம் முழுவது மோர் ,மற்றும் இளநீர் மட்டும் குடிப்போம்.

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க

About This Blog

நாம் யாருக்கு வாழ்நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்குகிறோம் (இதை அவர்கள் விளங்க மாட்டார்களா ? திருக்குர்ஆன் 36:68

Lorem Ipsum

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும்,வீனும் தவிற வேறில்லை.(இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?. 6.32

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP