IPL கிரிகெட்டும், அரசாங்கமும்

Saturday, April 24, 2010


தலைமையகத்தில் நடந்த ஜும்மாவின்
இரண்டாவது அமர்வில் ஆற்றிய உரையின் சுருக்கம்.



கி​ரிக்​கெட் பற்​றிக் கூறும்​போது,​​ 11 முட்​டாள்​கள் விளை​யா​டு​வதை 11 ஆயி​ரம் முட்​டாள்​கள் பார்க்​கி​றார்​கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இன்று​ 11 அதி​புத்​தி​சா​லி​கள் விளை​யா​டு​வதை 110 கோடி முட்​டாள்​கள் பார்க்​கி​றார்​கள். கி​ரிக்​கெட் மீது ஆரோக்​கி​ய​மான விமர்​ச​னங்​கள் மட்​டுமே எழுந்த கால​கட்​டம் மலை​யே​றி​விட்​டது.​ ​ நூ​றாண்​டு​க​ளுக்​கும் மேலாக கிரிக்​கெட் விளை​யா​டப்​ப​டு​கி​றது.​ ஆனால் அநா​க​ரி​க​மான சர்ச்​சை​க​ளும்,​​ விவ​கா​ரங்​க​ளும்,​​ ஊழல் குற்​றச்​சாட்​டு​க​ளும் அப்​போ​தெல்​லாம் எழுந்​த​தா​கத் தெரி​ய​வில்லை.​ என்​றைக்கு கிரிக்​கெட் விளை​யாட்​டா​கப் பார்க்​கப்​ப​டா​மல் கொள்ளை லாபம் ஈட்​டும் வணி​க​மா​கப் பார்க்​கப்​பட்​டதோ அப்​போதே அது விளையாட்டு என்ற பெயரை இழந்​து​விட்​டது.​ அது மட்​டு​மல்ல,​​ பல்​வேறு தட​கள விளை​யாட்​டு​கள் மீதான சமூ​கத்​தின் கவ​னத்​தை​யும் கிரிக்​கெட் கப​ளீ​க​ரம் செய்​து​விட்​டது.​ கி​ரிக்​கெட்​டின் அசுர வளர்ச்​சிக்கு பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளின் வணிக நோக்​கமே கார​ணம் என்​றால் அது மிகை​யல்ல.​ ​இரு நாடு​க​ளுக்கு இடை​யி​லான விளை​யாட்டை விளை​யாட்​டா​கப் பார்க்க வேண்​டு​மே​யன்றி அதை ஒரு போர் போலப் பார்க்​கக் கூடாது என்ற அடிப்​ப​டைப் பண்​பைக் கூட கிரிக்​கெட் வளர்க்​க​வில்லை.​ மாறாக பகை உணர்ச்​சியை மேலும் மேலும் தூண்டி,​​ அதன் மூலம் காசு பார்க்​கும் குறைந்​த​பட்ச நேர்​மை​யில்​லாத வணிக நோக்​கமே மேலோங்​கி​யி​ருக்​கி​றது.​ கி​ரிக்​கெட் என்ற நல்ல விளை​யாட்டு குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல ஆன​தற்கு யார் கார​ணம் என்று உற்று நோக்​கி​னால்,​​ பன்​னாட்டு வணிக நிறு​வ​னங்​க​ளும்,​​ ஸ்பான்​சர் என்ற பெய​ரில் வீரர்​க​ளுக்​குத் தரும் பண​மும்,​​ ஊட​கங்​கள் கிரிக்​கெட்​டுக்கு மட்​டுமே தரும் அதிக முக்​கி​யத்​தும் மட்டுமே என்​பது புரி​யும்.​ இந்​தியா-​பாகிஸ்​தான் இடை​யி​லான கிரிக்​கெட் போட்​டியை ஏதோ இரு நாடு​க​ளி​டை​யி​லான போரா​கவே பார்க்க வைக்​கப்​பட்​ட​தன் கார​ணம் என்ன? போட்​டி​யின் போது ஒரு பேச்​சுக்கு எதி​ரணி வீர​ருக்கு சாத​க​மா​கப் பேசி​னால் கூட சுற்​றி​யி​ருப்​ப​வர்​கள் நம்மை தேச விரோ​தி​யா​கப் பார்ப்​ப​தற்கு யார் கார​ணம்? போலி தேச​பக்​தியை ஊட்டி வளர்த்​த​தன் பின்​னணி வணி​கம்​.
கி​ரிக்​கெட்​டில் வெற்றி தோல்​வியை நிர்​ண​யிக்​கும் பெட்​டிங் என்ற சூதாட்​டம் நடை​பெ​று​கி​றது நன்​றாக விளை​யா​டும் வீரர் திடீர் அவுட் ஆவ​தும்,​​ சுமா​ராக விளை​யா​டும் வீரர் நன்​றாக விளை​யா​டு​வ​தும்,​​ நல்ல அணி​யின் திடீர் தோல்​வி​யும்,​​ மோச​மான அணி​யின் எதிர்​பாரா இமா​லய வெற்றி அடை​வ​து​மாக கிரிக்​கெட்​டில் இதெல்​லாம் சாதா​ர​ண​மாகி விட்டது.இதெல்​லாம் பெட்​டிங்​கால்​தான் நடைபெறுகிறது. கிரிக்​கெட்​டில் வெற்​றி​யும் தோல்​வி​யும் மட்​டு​மல்ல,​​ பெட்​டிங்​கும் சாதா​ர​ணம் என்று எண்ணி வழக்​கம் போல வணிக நிறு​வன வலை​யில் வீழ்ந்து கிரிக்​கெட்டை மக்கள் தொடர்ந்த் ரசிக்கிறார்கள்.​ ஐபி​எல் போட்டி ஓர் அடி​மைத்​த​னம் குடி​யும்,​​ கும்​மா​ள​மும்,​​ கலா​சார சீர்​கேட்​டுக்கு வழி​வ​குக்​கும் ஆட்​ட​மும் வீடு தேடி நம் வர​வேற்​ப​றை​யில் ஆடும்​போது தடுக்க வழி​யின்​றித் தவித்​துத்​தான் போகி​றோம்.​ நடிகைகள் ஒரு ஐபி​எல் கிரிக்​கெட் அணியை சில நூறு கோடி​க​ளுக்கு ஏலம் எடுத்​தார் என்று செய்​தி​கள் வரு​கின்​றன.​ வாழ்​நாள் முழு​வ​தும் சம்​பா​தித்த நடி​கை​யால் கூட இவ்​வ​ளவு தொகை​யைச் சேமிக்க முடி​யாது எனும்​போது இளம் நடி​கைகளுக்கு எங்​கி​ருந்து இத்​தனை கோடி​கள் வந்​தன என்று வரு​மான வரித்​துறை விசா​ரிக்​கா​தது ஆச்​ச​ரி​ய​மா​கத்​தான் உள்​ளது.​ சில திரைப்​ப​டங்​க​ளில் கதை என்று எது​வும் இருக்​காது.​ ஆனால் வெறும் திரைக்​க​தை​யின் விறு​வி​றுப்​புக்​காக அந்​தப் படம் வெற்றி பெறும்.​ பிறகு அதே போல பல படங்​கள் வரும்​போது வெறுப்பை ஏற்​ப​டுத்​தும்.​ பல்​வேறு கிரிக்​கெட் அர​சி​ய​லைப் பார்த்​தா​கி​விட்​டது.​கிரிக்​கெட் விளை​யாட்​டின் அடுத்த அர​சி​யல் பரி​ணா​மத்​தைப் பார்த்​துக் கொண்​டி​ருக்​கி​றார்​கள் இந்​தி​யர்​கள்.​ ஐ​பி​எல் போட்​டி​கள் விவ​கா​ரம் பெட்​டிங்கி​லி​ருந்து ஊழல் பக்​கம் சென்று இப்​போது குண்டு வெடிப்​பில் வந்து நிற்​கி​றது.​ ​ஒரு அணிக்கு ரூ.1,500 கோடி,​​ ரூ.3,000 கோடி ஏலம் என்று கூறு​வ​தைப் பார்த்​தால் கருப்​புப் பணத்​தில்​தான் ஐபி​எல் போட்​டி​களே விளை​யா​டப்​ப​டு​கி​றதோ என்று சந்​தே​கம் எழ ஆரம்​பித்​துள்​ளது.​ ஆனால் எது​வும் சில​கா​லம் என்​பது போல இது​வும் கடந்து போகும்.​ அப்​போது மீண்​டும் ஒரு ஐபி​எல் போட்​டியை பர​ப​ரப்​பு​டன் பார்ப்​ப​தற்கு இந்​தி​யர்​கள் தயா​ரா​கவே இருப்​பார்​கள்.​அ​து​வரை பாமர கிரிக்​கெட் ரசி​கன் முதல் படித்த விமர்​ச​கர்​கள் வரை சாமா​னி​யர்​க​ளுக்கு கிரிக்​கெட் விளை​யாட்டு ஒரு விளை​யாட்டு மட்​டுமே.​ ஆனால் பண முத​லை​க​ளுக்​கும்,​​ பன்​னாட்டு வணிக நிறு​வ​னங்​க​ளுக்​கும்,​​ ஊழல் அர​சி​யல்​வா​தி​க​ளுக்​கும் ​அவர்​தம் பினா​மி​க​ளுக்​கும்,​​ சூதா​டி​க​ளுக்​கும்,​​ நிழல் உலக தாதாக்​க​ளுக்​கும்,​​ கிரிக்​கெட் விளை​யாட்டு வெறும் விளை​யாட்​டல்ல!



0 comments:

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க

About This Blog

நாம் யாருக்கு வாழ்நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்குகிறோம் (இதை அவர்கள் விளங்க மாட்டார்களா ? திருக்குர்ஆன் 36:68

Lorem Ipsum

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும்,வீனும் தவிற வேறில்லை.(இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?. 6.32

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP