தொழுகையை விடுவதால் ஏற்படும் தீங்குகள்
Tuesday, November 16, 2010
முஸ்லீம்கள் கடைபிடிக்க வேண்டிய காரியங்களில் மிக முக்கியமானதும், முதன்மையானதும் தொழுகையாகும். இதுவே முஸ்லிம்களின் அடையாளம் ஆகும்.
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
அல்குர்ஆன:- 4.103
ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.
(அல்-குர்ஆன் 19:59)
எவ்வித பேரமோ, நட்போ இல்லாத நாள் வருவதற்கு முன் தொழுகையை நிலை நாட்டுமாறும் , நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் ( நல் வழியில் ) செலவிடுமாறும் நம்பிக்கை கொண்ட எனது அடியார்களுக்கு (முஹம்மதே) கூறுவீராக.
அல்குர்ஆன் :- 2.238
அவர்கள் சொர்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது ? " என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைகளுக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை" எனக் கூறுவார்கள். அல்குர்ஆன் 74:41-43
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். ”
அல்-குர்ஆன்107:4-5
கடமையான தொழுகையை ஒருவர் விடுவது அவரை நரகத்தில் கொண்டு சேர்க்கப் போதுமான காரணமாகும்.
" இனைவத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் ( முஸ்லீமான ) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும் " என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் -: ஜாபிர் ( ர்லி ) நூல்: 134
நமக்கும் , அவர்களுக்கும் ( இறை மறுப்பவர்களுக்கும் உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். அதைவிட்டவர் காfபிராகி விட்டார் ". என்று நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் -: புரைதா ( ரலி )
நூல் :நஸயீ 459. திர்மிதீ : 2545. இப்நுமாஜா: 1069. அஹ்மத்: 21859
ஒரு மனிதரின் தலை ந்சுக்கப் படுவதை நபி (ஸல்) அவர்கள் கனவில் கண்டார்கள். அது பற்றி அவர்கள் விளக்கும் போது , " அவர் குர்ஆனை கற்று, அதை புறகனித்து, கடமையான தொழுகையை தொழாமல் உறங்கியவர்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் -: ஸமுரா (ரலி) நூல்: புஹாரி 1143
0 comments:
Post a Comment