இஸ்லாம் ஓர் அறிமுகம்.
Thursday, March 25, 2010
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும்,,,
இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகம்.
செளதி அரேபியாவில் உள்ள மக்கா என்ற நகரத்தில் கி.பி 570 ல் பிறந்த முஹமது நபி (ஸல்) அவர்களால், அவர்களின் 40 வது வயதில் இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்யப் பட்டது. கி.பி 610 வது ஆண்டில் இந்த உலகத்திற்கு ஒரு கொள்கையச் சொன்னார்கள்.அந்த கொள்கையத்தான் இஸ்லாம் என்று உலகில் அனைவரும் சொல்கிறார்கள். அவர் சொன்ன கொள்கை, வணக்கத்திற்கும், வழிபாட்டிற்கும் உரியவன் அல்லாஹ் என்ற கடவுளைத் தவிற வேறு கடவுள் இல்லை என்று முஹமது நபி அவர்கள் இந்த உலகத்திற்கு உரத்துச் சொன்ன கொள்கையாகும். இந்த ஒரு கடவுள் கொள்கையச் சொல்லும் போது அவர்கள் சொன்னார்கள். இந்த கொள்கை உலகத்திற்கு நான் கண்டுபிடித்துச் சொன்ன புதிய கொள்கை அல்ல. உலகத்திலே மனித இனம் முதன் முதலாக எப்போது தோன்றியதோ, அப்போது இந்த கொள்கைதான் நடைமுறையில் இருந்தது. அந்த கொள்கையைத்தான் நான் புதுப்பிக்க வந்திருக்கிறேன் என்று நபிகள் நாயகம் சொன்னார்கள். உலகில் தோன்றிய ஆதிமனிதனிலிருந்து நபிகள் நாயகம்வரை உலகில் தோன்றிய எல்லா மகான்கள்,தீர்க்க தரிசிகள், சீர்திருத்த வாதிகள் அனைவரும் ஒரு கடவுள் கொள்கையைத்தான் வலியுருத்தியிருக்கிறார்கள் என்று நபிகள் நாயகம் அவர்கள் குறிப்பிட்டார்கள். ஒரு கடவுள் கொள்கையைச் சொன்ன நபிகள் நாயகம் அவர்கள் தன்னை கடவுளின் தூதர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார்கள்.நான் மனிதனாக இருந்தாலும், கடவுளின் தூதுராக இருக்கிறேன்.கடவுளிடமிருந்து செய்தியை பெற்று உங்களுக்கு சொல்லக்கூடிய பொறுப்பு எனக்கு தரப்பட்டிருக்கிறது என்று அவர்கள் சொன்னார்கள். வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவரும் இல்லை, நான் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன் என்று முஹமது நபி அவர்கள் சொன்னார்கள். இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகம்.
செளதி அரேபியாவில் உள்ள மக்கா என்ற நகரத்தில் கி.பி 570 ல் பிறந்த முஹமது நபி (ஸல்) அவர்களால், அவர்களின் 40 வது வயதில் இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்யப் பட்டது. கி.பி 610 வது ஆண்டில் இந்த உலகத்திற்கு ஒரு கொள்கையச் சொன்னார்கள்.அந்த கொள்கையத்தான் இஸ்லாம் என்று உலகில் அனைவரும் சொல்கிறார்கள். அவர் சொன்ன கொள்கை, வணக்கத்திற்கும், வழிபாட்டிற்கும் உரியவன் அல்லாஹ் என்ற கடவுளைத் தவிற வேறு கடவுள் இல்லை என்று முஹமது நபி அவர்கள் இந்த உலகத்திற்கு உரத்துச் சொன்ன கொள்கையாகும். இந்த ஒரு கடவுள் கொள்கையச் சொல்லும் போது அவர்கள் சொன்னார்கள். இந்த கொள்கை உலகத்திற்கு நான் கண்டுபிடித்துச் சொன்ன புதிய கொள்கை அல்ல. உலகத்திலே மனித இனம் முதன் முதலாக எப்போது தோன்றியதோ, அப்போது இந்த கொள்கைதான் நடைமுறையில் இருந்தது. அந்த கொள்கையைத்தான் நான் புதுப்பிக்க வந்திருக்கிறேன் என்று நபிகள் நாயகம் சொன்னார்கள். உலகில் தோன்றிய ஆதிமனிதனிலிருந்து நபிகள் நாயகம்வரை உலகில் தோன்றிய எல்லா மகான்கள்,தீர்க்க தரிசிகள், சீர்திருத்த வாதிகள் அனைவரும் ஒரு கடவுள் கொள்கையைத்தான் வலியுருத்தியிருக்கிறார்கள் என்று நபிகள் நாயகம் அவர்கள் குறிப்பிட்டார்கள். ஒரு கடவுள் கொள்கையைச் சொன்ன நபிகள் நாயகம் அவர்கள் தன்னை கடவுளின் தூதர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார்கள்.நான் மனிதனாக இருந்தாலும், கடவுளின் தூதுராக இருக்கிறேன்.கடவுளிடமிருந்து செய்தியை பெற்று உங்களுக்கு சொல்லக்கூடிய பொறுப்பு எனக்கு தரப்பட்டிருக்கிறது என்று அவர்கள் சொன்னார்கள். வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவரும் இல்லை, நான் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன் என்று முஹமது நபி அவர்கள் சொன்னார்கள். இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
0 comments:
Post a Comment